இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 234 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 354 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் (127), அஷ்வின் (92) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில், பெஸ்ட் வேகத்தில் பவுண்டரி அடித்து அஷ்வின், டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 177 ரன்னில் அவுட் ஆகி, இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, இந்திய அணி முதல் இன்னிங்சில் 453 ரன் எடுத்தது. 219 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 168 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் முகம்மது சமி 5, அஸ்வின் 3, புவனேஸ்வர்குமார் 1 விக்கட்டுகளை கைப்பற்றினர். ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
|