தேவையானவை :
1. கேழ்வரகு மாவு - 500 கிராம்
2. வறுத்த உளுந்து, கடலைப் பருப்பு - தலா 50 கிராம்
3. உப்பு, மிளகாய்த் தூள் - தேவைகேற்ப
4. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1. கேழ்வரகு மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும்.
2. இதில் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.
3. சிறிய அளவில் உருண்டையாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக்கொள்ளவும்.
4. கடாயில் எண்ணெய்யை ஊற்றி மிதமான சூட்டில் காயவைத்து, ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.
|