1.குற்றாலம் மலைச்சாரலில் விளையும் இந்த மங்குஸ்தான் பழம் பார்ப்பதற்கு பனை நொங்கு போல் உள்ளது. இதன் வெளிப்புறத் தோலை நீக்கினால் உள்ளே பருத்தியை போன்று வெண்மையான ஆரஞ்சு நிற சுளைகள் உள்ளது.
2.குளிர்ச்சியை தந்து உடல் சூட்டை தணிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், மாதவிடாய் அதிகம் போவதை கட்டுப்படுத்துதல், குடல் இரப்பை புண், அல்சர், நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இதன் தோல் பகுதி துவர்ப்பாக உள்ளதை காய வைத்து தூள் ஆக்கி வைத்துக் கொண்டால் ரத்த கசிவுடன் மலம் வெளியேறும் போது உண்டு வந்தால் நோய் தீரும். இத்துடன் இந்த பழம் பசி இல்லாதவர்களுக்கு பசியையும், உண்டாக்கும். ஏப்ரல் முதல் ஜூலை வரை விளையும் இந்த பழம் ரூ.3 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.
3.முட்டை பழம், மாம்பழம் போன்று உள்ள இந்த பழம் நன்றாக பழுத்ததும் உடைந்து விடுகிறது. இதன் உட்புறம் முட்டையின் மஞ்சள் கருவை போன்று மாவு போல் சுவையாக உள்ளது. இதை சாப்பிட்டால் மனநிலை சரியில்லாதவர்களுக்கு தீர்வு கிடைக்கும். பள்ளி குழந்தைகளுக்கு ஞாபக சக்தி தரும். சிறுநீர் பிரச்சினை உள்ளவர்களுக்கு நோய் தீர்ந்து தெளிவாக சிறுநீர் பிரிகிறது.
|