|
||||||||
கதைசொல்லி முதல் பயிலரங்கம் திரு.விழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது.. |
||||||||
நம் கதைசொல்லி குழுவின் பெற்றோர்கள் , தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிலடங்கம் நேற்று ஒரு மணி நேரம் சிறப்பாக நடந்தேறியது. இதில் குழுவிலிருந்து பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைந்தீர்கள் . இது ஒவ்வொரு மாதமும் ஒரு சிறுவர் இலக்கிய படைப்பாளிகளைக் கொண்டு நடைபெற இருக்கிறது . கதை சொல்வது என்பது ஒரு தனித்திறமை.. அதில் கவனிக்க வேண்டிய , கையாளவேண்டிய உத்திகளை குழந்தைகள் உலகில் பயணிக்கும் திரு.விழியன் போன்றோர்களிடமிருந்து அறிந்து நம் வீட்டில் நடைமுறைப்படுத்தலாம், விழிப்புணர்வு பெறலாம். எனவே இந்த உரையாடல் நேற்று பதிவுசெயயப்பட்டதை இங்கே கலந்துகொள்ள இயலாதவர்களுக்காக பகிரப்படுகிறது . அனைத்து பெற்றோர்களுக்கும், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பகிருங்கள் .. தினமும் குழுவில் இணைந்து கதைகளை பேசி பயனடையுங்கள் .. '
திரு.விழியனின் நிகழ்ச்சியில் பகிரப்பட்ட, பேசப்பட்ட சில விடயங்களின் சுருக்கம் ..
-இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு கதைகள் தேவையா ?
-Bed Time Story Time - தமிழ் சூழலில் எப்படி உள்ளது?
-கூட்டுக்குடும்பங்கள் இல்லாத சூழலில், தாத்தா பாட்டிகள் அருகில் இல்லாத புலம்பெயர் சூழலில் குழந்தைகளுக்கு கதைகளை சொல்வது எப்படி?
=நம் மொழி, நம் நிலம், நம் வாழ்வியல்,நம் கலை,நம் உணவு, நம் பண்பாடு,, நம் வட்டார வழக்கு ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்த கதை சொல்வது சிறப்பான கருவி
-இதை கதை சொல்வது என்பதைவிட கதை பேசுதல் என்பதுதான் சரியான பொருளைத்தரும். இருவரும் உரையாடவேண்டியது அவசியம் .
-குழந்தை வளர்ப்பு , தரமான நேரம் ஒதுக்குதல் (Quality Time)
-குழந்தைகளுக்கு நல்ல நண்பனாக , மனதுக்கு நெருக்கமானவராக கதைசொல்பவர் மாறமுடியும்.. (Bonding will increase)
-ஒவ்வொரு பெற்றோரும் கதைசொல்லியாக மாறவேண்டும் . இதற்கு தக்க பயுற்சி மேற்கொண்டு , தயார்படுத்திகொள்ளவேண்டும் .
-கதைசொல்வதால் பெற்றோர்களுக்கு தேடல் அதிகமாகும் .. குழந்தை உலகைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வாய்ப்பு... வாசிப்பும், புரிதலும் அதிகமாகும் ..
-குழந்தைகள் வாசிப்பின் நோக்கத்தை, தேடலை அதிகப்படுத்த குழந்தைகளுக்கு இது பயன்படுகிறது .
-பல மனிதர்களை அறிமுகம் செய்ய மிகவும் பயன்படுகிறது .
-விலங்குகள்தான் குழந்தைகளுக்கு மிக நேர்காமான உலகம்.எனவே விலங்குகள் வழியே, அவைகள் பேசுவதுபோல் கதைகளை கொண்டுசெல்வது அவர்களுக்கு எளிதில் சென்றடையும்.
-கதைகளை ஆடியோவில் கேட்பது , காணொளியாக பார்ப்பது தொடக்கத்திற்கு உதவலாம். ஆனால் இது ஒரு மாறுதலுக்கு வெளிசாப்பாடு வாங்கி சாப்பிடுவது போன்றது, அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி கதைசொல்வதுதான் வீட்டு சாப்பாடு சாப்பிடுவது போன்றது. வெளிசாப்பாட்டை எப்போதாவது ஒரு மாறுதலுக்கு சாப்பிடுங்கள் .
-கதை சொல்வதால் என்ன பயன்? என் குழந்தை வளர்ந்து என்ன கதையாசிரியராக்வா ஆகப் போகப்போகிறார்கள்? வேறு என்ன பயன்?
- நாம் பயன்படுத்தும் எல்லாம் ,நம் அறிவியல் உள்ளிட்ட அனைத்தும் ஒரு தனிமனிதனின் கற்பனையில் , மனத்திரையில் ஓடவிடுவதாலேயே உருவாகிறது .
-ஒவ்வொரு கதையின் மையமும், அன்பு, மனிதநேயம், சக உயர்களை நேசிப்பது என்பதாகவே இருக்கிறது .
-ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மொழிவழக்கு இருக்கிறது. இவைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த இதுவே முக்கிய பங்குவகிக்கிறது. உதாரணமாக திருநெல்வேலி, தஞ்சாவூர் , கோயம்புத்தூர், மதுரை வட்டார வழக்குகளை குறிப்பிடலாம்.
-தமிழ்நாட்டில் கிடைக்கும் குழந்தைகளுக்கான நூல்கள் அமெரிக்காவில் பயன்படுத்த முடியுமா?
-தமிழ்ப்பள்ளிகள் இந்த கதை சொல்லிகளை அவர்கள் பள்ளிகளில் ஊக்கப்படுத்தி பெற்றோர்கள் இணைந்து கதைசொல்லும் அனுபவங்களை பகிர்ந்து அவர்களுக்கு கதைசொல்லும் திறமையை , உத்திகளை வளர்த்துக்கொள்வதன் அவசியம் ..கதைசொல்லிகளின் சந்திப்புகள் தமிழ்ப்பள்ளிகளின் வளாகத்தில் நடத்த பள்ளிகள் முயற்சி மேற்கொள்வது தமிழ் பாடநூல் படிக்க உதவும்..
-ஒரு வாரம், ஒரு மாதம் கதைகள் கிடைக்கும் ஆனால் தொடர்ந்து நல்ல கதைகள் கிடைக்க சரியான கட்டமைப்பு முக்கியம்.
-கதை சொல்வது ஒரு கலை. அதன் உத்திகள், பயிற்சிகள் குறித்து மேலும் சில பயிற்சிகள் கொடுக்க முடியுமா?
-அழிந்துவரும் சிறுவர் இலக்கியங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவது எப்படி?
-சிறுவர் நூல்கள் பெரும்பாலும் அண்ணா நூலகங்களில் கிடைக்கிறது. சென்னை வருபவர்கள் அண்ணா நூலகம் கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்வையிடுங்கள் .
-தமிழகத்தில் உள்ள சிறுவர் இலக்கிய எழுத்தாளர்களுக்குள் ஏதும் கருத்தரங்கங்கள், சந்திப்புகள் நடைபெறுகிறதா?
-முதல் சர்வதேச குழந்தைகள் கருத்தரங்கம் வரும் ஜூன் மாதத்தில் மலேசியாவில் நடக்க இருக்கிறது .
-1975-ல் நடந்த குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய 25 வது ஆண்டு விழா நடத்தும்போது 400 எழுத்தாளர்களின் விவரங்களை வெளியிட்டார்கள். தற்போது 70- எழுத்தாளர்கள்கூட இல்லை என்பதுதான் கவலைகொள்ளும் நிலையாக உள்ளது.
Are you getting the stories everyday ? if not, Join TODAY
Kathaisolli - Group Details. Stay connected in any one group.
===============================
Telegram : https://t.me/DailyKidsStory
Google Group : https://groups.google.com/forum/#!forum/kidsstories
===============================
|
||||||||
by Swathi on 18 Mar 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|