கடந்த 8ம் தேதி நடந்த சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இப்போட்டி முடிவடைந்த பின் பர்மிங்காமில் உள்ள பிரபல பார் ஒன்றில் மது அருந்திய டேவிட் வார்னர் போதையில் தகராறு செய்துள்ளார். மேலும் அங்கிருந்த இங்கிலாந்து வீரரை தாக்கியுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து டேவிட் வார்னர் நீக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தகராறு உறுதி செய்யப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.
|