|
|||||
மகாராஷ்டிர மாநில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கோவை சதாசிவத்தின் சில்லுக்கோடு உரையாடல் கதை |
|||||
கோயம்புத்தூர் மாநகரில் 23 செப்டம்பர் 1961 அன்று வள்ளியம்மாள்-கந்தசாமி இணையரின் தலைமகனாகப் பிறந்தார் சதாசிவம். பொருளியப் பின்புலம் அற்ற குடும்பச்சூழல் காரணமாக ஐந்தாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்ட சதாசிவம், ஒரு கடைசல் இயந்திரப் பட்டறையில் வேலை பார்த்தார். அதன்பின் மிதிவண்டிக் கடை வைத்திருந்தார். பின்னலாடைத் தொழிலாளியாகவும் இருந்தார். தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சியளித்தல் உள்ளிட்ட முழுநேர சுற்றுச் சூழல் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும், எழுத்தாளர், கதைசொல்லி, ஆவணப்பட இயக்குநர், மற்றும் பேச்சாளர் ஆவார்.
*********************************
இவர் எழுதிய பல்வேறு நூல்களில் மக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளை முன்னிறுத்தியுள்ளார். இவரது எழுத்துவழி கருத்துக்கள் மக்களை சிந்திக்க வைத்துள்ளது. விளையாட்டு சம்பந்தமாக இவர் எழுதிய சில்லுக்கோடு என்ற நூலில் தமிழ்நாட்டுக் குழந்தைகளின் 21 பாரம்பரிய விளையாட்டுக்கள் குறித்து விளக்கமாக கூறியுள்ளார்.
**********************************
சில்லுக்கோடு என்ற நூலில்....................
‘சடுகுடு விளையாட்டு’
மூச்சை அடக்கவும் ,
கள்வனைப் பிடிக்கவும்,
எதிரணியிடமிருந்து மீளவும்
கொடுக்கப்பட்ட பயிற்சியின் நீட்சிதான்
சடுகுடு என சடுகுடு விளையாட்டின் வரலாற்றினை குறிப்பிட்டுள்ளார்.
*********************************
விளையாட்டுகள் நட்பை வளர்க்கிறது.
************************************************
கண், காது, மூக்கு, வாய் என உடலில் நான்கு புலன்களும் இயங்கும் சடுகுடு விளையாட்டு உடலுக்கு பலத்தையும், உள்ளத்துக்கு உறுதியும் அளிக்கிறது. சடுகுடு விளையாட்டு தமிழகத்தில் தோன்றி ‘கபடி’ விளையாட்டாக பரிணமித்து இன்று 65 நாடுகளில் விளையாடப்படுகிறது.
*****************************
நொண்டி விளையாடிக் கொண்டே செய்யும் உடற்பயிற்சி. ஒரு காலை மடக்கி , ஒரு காலில் தவ்வும் பொழுது கால்களுக்கு இடையே அதிகரிக்கும் இரத்த ஒட்டம் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்பெறச் செய்து மலட்டுத் தன்மையை நீக்குகிறது. சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது. தன்னம்பிக்கையைத் தருகிறது குழந்தைகளிடத்தில் விளையாட்டுகள் நட்பை வளர்க்கிறது.
********************************
உட்பட பல்வேறு விளையாட்டுக்களை குறித்தும் தாய் குழந்தைக்கு சேறூட்டுவது குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த புத்தகத்தில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் இத்தகைய பெருமை தாங்கி வெளிவந்துள்ள சில்லுக்கோடு நூல் மகாராஷ்டிர மாநில அரசின் தமிழ் பிரிவு பாடப்புத்தகத்தில், சில்லுக்கோடு உரையாடல் கதை இடம்பெற்றுள்ளது.
கோயம்புத்தூர் மாநகரில் 23 செப்டம்பர் 1961 அன்று வள்ளியம்மாள்-கந்தசாமி இணையரின் தலைமகனாகப் பிறந்தார் சதாசிவம். பொருளியப் பின்புலம் அற்ற குடும்பச்சூழல் காரணமாக ஐந்தாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்ட சதாசிவம், ஒரு கடைசல் இயந்திரப் பட்டறையில் வேலை பார்த்தார். அதன்பின் மிதிவண்டிக் கடை வைத்திருந்தார். பின்னலாடைத் தொழிலாளியாகவும் இருந்தார். தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சியளித்தல் உள்ளிட்ட முழுநேர சுற்றுச் சூழல் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும், எழுத்தாளர், கதைசொல்லி, ஆவணப்பட இயக்குநர், மற்றும் பேச்சாளர் ஆவார். இவர் எழுதிய பல்வேறு நூல்களில் மக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளை முன்னிறுத்தியுள்ளார். இவரது எழுத்துவழி கருத்துக்கள் மக்களை சிந்திக்க வைத்துள்ளது. விளையாட்டு சம்பந்தமாக இவர் எழுதிய சில்லுக்கோடு என்ற நூலில் தமிழ்நாட்டுக் குழந்தைகளின் 21 பாரம்பரிய விளையாட்டுக்கள் குறித்து விளக்கமாக கூறியுள்ளார். சில்லுக்கோடு என்ற நூலில்.................... ‘சடுகுடு விளையாட்டு’மூச்சை அடக்கவும் ,கள்வனைப் பிடிக்கவும்,எதிரணியிடமிருந்து மீளவும்கொடுக்கப்பட்ட பயிற்சியின் நீட்சிதான்சடுகுடு என சடுகுடு விளையாட்டின் வரலாற்றினை குறிப்பிட்டுள்ளார். விளையாட்டுகள் நட்பை வளர்க்கிறது
நொண்டி விளையாடிக் கொண்டே செய்யும் உடற்பயிற்சி. ஒரு காலை மடக்கி , ஒரு காலில் தவ்வும் பொழுது கால்களுக்கு இடையே அதிகரிக்கும் இரத்த ஒட்டம் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்பெறச் செய்து மலட்டுத் தன்மையை நீக்குகிறது. சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது. தன்னம்பிக்கையைத் தருகிறது குழந்தைகளிடத்தில் விளையாட்டுகள் நட்பை வளர்க்கிறது. உட்பட பல்வேறு விளையாட்டுக்களை குறித்தும் தாய் குழந்தைக்கு சேறூட்டுவது குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த புத்தகத்தில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் இத்தகைய பெருமை தாங்கி வெளிவந்துள்ள சில்லுக்கோடு நூல் மகாராஷ்டிர மாநில அரசின் தமிழ் பிரிவு பாடப்புத்தகத்தில், சில்லுக்கோடு உரையாடல் கதை இடம்பெற்றுள்ளது.
|
|||||
by Kumar on 10 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|