|
||||||||
ஈஸ்டர் |
||||||||
வசந்த காலம்: இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கி.பி. 29ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர்
பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது. ஈஸ்டர் என்ற வார்த்தைக்கு 'வசந்த காலம்' என்ற அர்த்தமும் உண்டு.இயேசுவின் உயிர்த்தெழுதலை
குறிக்கும் ஈஸ்டர் பற்றி விரிவாக அறிய கிறிஸ்துவத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உலகையும் அதன் சகல
ஜீவராசிகளையும் சிருஷ்டித்த தேவாதி தேவன் தன்னுடைய சாயலாக ஆதாமையும், ஏவாளையும் உருவாக்கினார். ஏதேன் தோட்டத்தில் அவர்களோடு
உலாவித் திரிந்தார். ஆனால் ஏமாளி ஏவாள் சாத்தான் சூழ்ச்சியில் எளிதாக வீழ்ந்தார். ஏவாழுக்காக ஆதாமும் பாவத்தில் விழுந்தார்.உலகின் மீட்பிற்காக
அனுப்பி வைத்தார்: தன்னுடைய சாயலாக ஆசை, ஆசையாக படைத்த மனிதன், பாவத்திற்கு ஆட்பட்டதால் அவர்கள் இருவருக்கும் சில தண்டனைகளை
விதித்து தன்னுடைய பரிசுத்த சமூகத்திலிருந்து துரத்தி விட்டார் தேவன்.ஆதாமும், ஏவாளும் தன்னை விட்டு விலகினாலும் மனிதகுலத்தின் மீது இறைவன்
கருணையுடனே இருந்தார். நோவா, ஆபிரகாம் என சில நல்ல மனிதர்கள் இறைவனின் சொல்படி நடந்தார்கள். அவர்களை ஆண்டவர் ஆசீர்வதித்தார்.
ஆனால் பெரும்பான்மை மக்கள் பாவத்திற்குள் சிறைப்பட்டு செத்து மடிந்தார்கள்.அவர்களுக்காக பரிதவித்த பரம பிதா தம்முடைய ஒரே பேரான குமாரனை
உலகின் மீட்பிற்காக மண்ணுலகிற்கு அனுப்பி வைத்தார். அவர்தான் இயேசு கிறிஸ்து.தேவனின் அற்புதங்கள்:உலகை உய்விக்க ரட்சகராய் அவதரித்த இயேசு
கிறிஸ்து, ஏழை தச்சரான ஜோசப்- மரியாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். 30 வயது வரை பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். அதன் பின் உலக
மீட்பிற்கான இறைவனின் திட்டத்தை மக்களுக்கு விளக்கி போதனை செய்தார். 3 ஆண்டுகள் இரவும் பகலும் இடைவிடாது மக்களைச் சந்தித்து அவர்களுக்கு
நல்வழிகளை போதித்தார்.சப்பாணி, குருடன், குஷ்டரோகிகள் என ஏராளமான நோயாளிகளை இறையருளால் சுகமாக்கினார். கல்லறை தோட்டத்தில் அடக்கம்
செய்யப்பட்ட லாசர் என்பவரை உயிரோடு எழுப்பினார். வேதாகமத்தை வாசித்தால் அவர் செய்த அற்புதங்கள், அதிசயங்களை இன்னும் விரிவாய் அறிந்து
கொள்ளலாம்.இயேசு உடலில் 5,466 காயங்கள்!மரித்தோரை உயிர்பித்து தான் தேவகுமாரன் என்பதை நிரூபித்த இயேசுவை அப்போதைய யூத மதத்
தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு பாவமும் செய்யாத அவர் மீது குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொடூரமாக கொலை செய்தனர். அவர்
சிலுவைப்பாடுகளை அனுபவித்த போது அவர் உடல் முழுவதும் கிட்டத்தட்ட 5,466 விழுப்புண்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
சிலுவையில் மரித்த இயேசு 3ஆம் நாளில் உயிர்த்தெழுந்தார். மனிதனாகப் பிறந்து உயிரோடு எழும்பிய ஒரே நபர் அவர் மட்டுமே. மனித குலத்திற்கு
மீட்பிற்காக மரித்து உயிர்ந்தெழுந்த இயேசு இன்றும் உயிரோடு ஜீவிக்கிறார். தம்மை நோக்கி உண்மையோடு வேண்டுபவர்களுக்கு பாவ மன்னிப்பை அருளி,
பரலோகத்தில் அவர்களுக்கும் ஓரிடத்தை உறுதி செய்து கொடுக்கிறார்.அவருக்கு பிரியமாய் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறார்.
ஆனால் மனிதர்கள் உலகத்தின் இச்சைகளால் இழுப்புண்டு பாவசேற்றில் சிக்கி அமிழ்ந்து போகிறார்கள்.அன்பை ருசித்து பார்:ஒரே ஒரு முறை இயேசு
கிறிஸ்துவின் புனிதமான அன்பை அனுபவித்தவர்கள் அவருடைய அருளின் வல்லமையையும், ஈடிணையற்ற கருணையையும் அறிந்து கொள்ள முடியும்.
இந்த ஈஸ்டர் திருநாளிலாவது மனிதர்கள் இறைவனை நோக்கி தங்கள் மனதைத் திருப்பி பரலோகப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று இயேசு
எதிர்பார்க்கிறார்.
வசந்த காலம்:
இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கி.பி. 29ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது. ஈஸ்டர் என்ற வார்த்தைக்கு 'வசந்த காலம்' என்ற அர்த்தமும் உண்டு.இயேசுவின் உயிர்த்தெழுதலை குறிக்கும் ஈஸ்டர் பற்றி விரிவாக அறிய கிறிஸ்துவத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உலகையும் அதன் சகல
உலகின் மீட்பிற்காக அனுப்பி வைத்தார்:
தன்னுடைய சாயலாக ஆசை, ஆசையாக படைத்த மனிதன், பாவத்திற்கு ஆட்பட்டதால் அவர்கள் இருவருக்கும் சில தண்டனைகளை விதித்து தன்னுடைய பரிசுத்த சமூகத்திலிருந்து துரத்தி விட்டார் தேவன்.ஆதாமும், ஏவாளும் தன்னை விட்டு விலகினாலும் மனிதகுலத்தின் மீது இறைவன் கருணையுடனே இருந்தார். நோவா, ஆபிரகாம் என சில நல்ல மனிதர்கள் இறைவனின் சொல்படி நடந்தார்கள். அவர்களை ஆண்டவர் ஆசீர்வதித்தார். ஆனால் பெரும்பான்மை மக்கள் பாவத்திற்குள் சிறைப்பட்டு செத்து மடிந்தார்கள். அவர்களுக்காக பரிதவித்த பரம பிதா தம்முடைய ஒரே பேரான குமாரனை உலகின் மீட்பிற்காக மண்ணுலகிற்கு அனுப்பி வைத்தார். அவர்தான் இயேசு கிறிஸ்து.
தேவனின் அற்புதங்கள்:
உலகை உய்விக்க ரட்சகராய் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஏழை தச்சரான ஜோசப் மரியாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். 30 வயது வரை பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். அதன் பின் உலக மீட்பிற்கான இறைவனின் திட்டத்தை மக்களுக்கு விளக்கி போதனை செய்தார். 3 ஆண்டுகள் இரவும் பகலும் இடைவிடாது மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நல்வழிகளை போதித்தார்.சப்பாணி, குருடன், குஷ்டரோகிகள் என ஏராளமான நோயாளிகளை இறையருளால் சுகமாக்கினார். கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட லாசர் என்பவரை உயிரோடு எழுப்பினார்.வேதாகமத்தை வாசித்தால் அவர் செய்த அற்புதங்கள், அதிசயங்களை இன்னும் விரிவாய் அறிந்து கொள்ளலாம்.
இயேசு உடலில் 5,466 காயங்கள்:
மரித்தோரை உயிர்பித்து தான் தேவகுமாரன் என்பதை நிரூபித்த இயேசுவை அப்போதைய யூத மதத்தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு பாவமும் செய்யாத அவர் மீது குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொடூரமாக கொலை செய்தனர். அவர் சிலுவைப்பாடுகளை அனுபவித்த போது அவர் உடல் முழுவதும் கிட்டத்தட்ட 5,466 விழுப்புண்கள் இருந்ததாக கூறப்படுகிறது.சிலுவையில் மரித்த இயேசு 3ஆம் நாளில் உயிர்த்தெழுந்தார். மனிதனாகப் பிறந்து உயிரோடு எழும்பிய ஒரே நபர் அவர் மட்டுமே.
மனித குலத்திற்கு மீட்பிற்காக மரித்து உயிர்ந்தெழுந்த இயேசு இன்றும் உயிரோடு ஜீவிக்கிறார். தம்மை நோக்கி உண்மையோடு வேண்டுபவர்களுக்கு பாவ மன்னிப்பை அருளி, பரலோகத்தில் அவர்களுக்கும் ஓரிடத்தை உறுதி செய்து கொடுக்கிறார்.அவருக்கு பிரியமாய் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறார். ஆனால் மனிதர்கள் உலகத்தின் இச்சைகளால் இழுப்புண்டு பாவசேற்றில் சிக்கி அமிழ்ந்து போகிறார்கள்.
அன்பை ருசித்து பார்:
ஒரே ஒரு முறை இயேசு கிறிஸ்துவின் புனிதமான அன்பை அனுபவித்தவர்கள் அவருடைய அருளின் வல்லமையையும், ஈடிணையற்ற கருணையையும் அறிந்து கொள்ள முடியும். இந்த ஈஸ்டர் திருநாளிலாவது மனிதர்கள் இறைவனை நோக்கி தங்கள் மனதைத் திருப்பி பரலோகப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். |
||||||||
by Swathi on 17 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|