குழந்தைக்கு தாயப்பால் கொடுக்க பல தாய்மார்களுக்கு போதுமான அளவில் இல்லாமல் வற்றிய நிலை இன்று பெருமளவில் காணப்படுகிறது.இதனால் இவர்கள் குழந்தைகளுக்கு செயற்கை உணவு வகைகளை கொடுக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றனர். செயற்கை உணவில் சத்துகள் குறைவு, தாய்ப்பாலில் இயற்கை ஜீவசத்துக்கள் நிறைந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தாயாருக்கும் இது தெரிந்த உண்மை.ஆனால் பால் சுரக்க வில்லையே? என்று வேதனைப்படுகின்றனர். இதற்கு என்ன காரணம்? என்பதை ஆயுர்வேதம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
தாய்பால் குறைவுக்கு காரணம் :
தாயாருக்கு ஏற்படும் கோபத்தினால் உடற்சூடு அகிதரித்து தாயப்பால் வற்றிவிடுகிறது. அதுபோல துக்கத்தினால் தாதுக்களின் செயல்திறன் குன்றி விடுவதாலும் ஏற்படும். மேலும் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு கர்ப்பத் தரித்ததால் அதன் மூலம் வெறுப்படைந்து குழந்தை பிறந்ததும் அதனிடம் சிறிதும் பிரியமில்லாமையின் மூலமாகவும் தாயப்பால் வற்றிவிடும். அதிக உடல் உழைப்பு, பட்டினியிருத்தல் அல்லது சத்தான உணவை உட்கொள்ளாதிருத்தல் போன்றவையாலும் தாயப்பால் குறைந்துவிடுகிறது. இவ்வகை காரணங்களை தாய்ப்பால் நன்கு ஊறி வரும் காலங்களில் நீக்க வேண்டும்.வயதின் முதிர்ச்சி காரணமாக கருத்தறிக்கும் பெண்ணிற்கு உடலின் நெய்ப்புத் தன்மை குறைவால் பிரசவம் கடுமையாகிறது. மேலும் தாய்ப்பாலும் அதிக அளவில் சுரப்பதில்லை.
பெண்ணின் திருமண வயது எது ?
இருபத்தி ஐந்து வயது பூர்த்தியான ஆணிற்கு பதினாறு வயது நிரம்பிய பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இவ்வாறு பதினாறு வயதில் கருத்தறிக்கும் பெண்ணிற்கு பிரசவம் எளிதாகவும் தாய்ப்பால் நீண்ட மாதங்களாகத் தங்கு தடையின்றி வருவதையும் காணமுடிகின்றது.பெண்ணின் திருமண வயது 21 என்று ஆட்டோவின் பின்புறம் எழுதி வைத்துள்ளதைக் காண்கிறோம். அதாவது 21 வயது முதல்தான் அவள் உடல் மற்றும் மன ரீதியாக திருமணத்திற்கு தகுதியுள்ளவளாகிறாள் என்று அதன் அர்த்தம். அதனால் பல பெற்றோர் 21 வயதிற்குப் பிறகுதான் திருமணப் பேச்சைத் தொடங்குகின்றனர். இதில் ஏற்படும் காலதாமதம் அப்பெண்ணிற்கு கருவுறும் சமயத்தில் மிகுந்த உபத்ரவங்களை ஏற்படுத்துகிறது. சாதாரண பிரசவமாக இல்லாமல் சிசேரியன் அறுவை சிகித்ஸை- தண்டுவடத்தில் போடப்படும் ஊசி, பல நாட்களுக்கு படுத்திருக்க வேண்டிய நிலை போன்றவற்றால் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவதால் தாய்ப்பால் சுரப்பி குன்றி விடுகிறது. மேற்கூறிய இரு விஷயங்களையும் தவிர்த்து குழந்தைக்கு ஊட்டம் நிறைந்த தாய்ப்பாலை வெறுப்பதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |