|
||||||||
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. |
||||||||
சென்னை திருவள்ளுவர் அரங்கத்தில் பிப்ரவரி 11 -2024-ம் தேதி உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பில் "Thirukkral Translations in world Languages புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமை தாங்கி, உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் நோக்கம் மற்றும் Thirukkral Translations in world Languages என்ற புத்தகத்தின் சிறப்பு குறித்து உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், வலைத்தமிழ் ஆசிரியருமான ச.பார்த்தசாரதி விளக்கினார்.
இதை அடுத்து ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு, ஏப்ரல் 5-7, 2024 தேதிகளில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்றது. விழாவில் உலகத்தின் பல நாடுகளிலிருந்து ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், திருக்குறள் ஆர்வலர்கள், அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச்சங்க மக்கள், மாணவர்கள் என்று அனைவரும் சங்கமிக்கும் ஒரு பெரும் மாநாடாக நடந்தேறியது.
இம்மாநாட்டை சிகாகோ தமிழ்ச்சங்கம் முன்னெடுத்துப் பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்துச் செய்திருந்தது.
அதன் ஒரு பகுதியாகத் தமிழறிஞர் சாலமன் பாப்பையாவால், வலைத்தமிழ் பதிப்பக வெளியீடாக வந்துள்ள உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் (Thirukkural Translations in World Languages) என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது.
இந்நூலை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவைத் தலைவர் முனைவர். பாலா சாமிநாதன் , சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர் நம்பிராஜன் வைத்திலிங்கம், முனைவர் மருதநாயகம் , ஹார்வார்ட் தமிழிருக்கை புரவலர்கள் விஜய் ஜானகிராமன், சம்பந்தம் , திருக்குறள் ஆர்வலர் தாமஸ் ஹிட்டோஷி புருக்ஷ்மா உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு, சிகாகோ-வைத் தொடர்ந்து அடுத்து மூன்றாவது நாடாகச் சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியிடப்படவிருக்கிறது..
இதுகுறித்து உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், வலைத்தமிழ் ஆசிரியருமான ச.பார்த்தசாரதி கூறும்போது, "நம் பெரும் கனவு "திருக்குறள் 2030" இலக்கு. ஒவ்வொரு வெளியீடும் , நூல் அறிமுக விழாவும் வெறும் வெளியீடாக, உரையாடல் என்று மட்டுமல்லாமல், வெளியிடப்படும் ஒவ்வொரு இடத்திலும் இன்னும் திருக்குறள் மொழிபெயர்க்கவேண்டிய 158 மொழிகளிலிருந்து குறைந்தது மூன்று மொழிகளில் மொழிபெயர்ப்பைக் கொண்டுவரத் திருக்குறள் ஆர்வலர்களைக்கொண்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நம் இலக்கு "திருக்குறள் 2030".
பல ஆண்டுகளாக முகநூலில் , தொலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் சிங்கப்பூர் நட்புகளை, இலக்கிய அன்பர்களை, எழுத்தாளர்களை, ஆளுமைகளை , வலைத்தமிழ் ஊடகத்துடன் பயணித்த பல்வேறு நட்புகளை முதன்முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பாக இதைப் பார்க்கிறேன்.
சிங்கப்பூரில் ஏப்ரல் மாதத்தைத் தாய்மொழி மாதமாகக் கொண்டாடுகிறீர்கள். உலகின் மூத்த மொழி தமிழ், தமிழில் முதன்மை வாழ்வியல் இலக்கியம் திருக்குறள். அதுகுறித்து ஒரு நெடிய பன்னாட்டு ஆய்வை மேற்கொண்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் வளர்ச்சிப்பணியாக, திருக்குறள் உலகப் பரவலாக்கல் காலத்தின் கட்டாயம் என்றுணர்ந்த, நமக்குள் நம் சிறப்புகளைப் பேசியது போதும் உலகம் பேசட்டும், உலகிற்குக் கொண்டுசெல்வோம் என்று முன்னெடுக்கப்படும் இந்த உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தின் இறுதி அறிக்கை நூல் வெளியீட்டை ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரில் முன்னெடுக்கும் சிங்கப்பூர் வாசகர் வட்டம், MAST அமைப்புகளுக்கும் ஒத்துழைப்பு நல்கும் அனைத்து அமைப்புகளுக்கும் மிக்க நன்றி...
சிங்கப்பூர் நட்புகள் அனைவரும் ஏப்ரல் 18, வியாழன் , மாலை 6:30 மணிக்கு உங்கள் நேரத்தைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்து உரையாட ஆவலாக உள்ளேன்.
நேரில் சந்திப்போம்.. உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்காக உங்கள் முன்பதிவு அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்ய: https://globaltamilevents.com/thirukkural-translations-in-world-languages-singapore-tview1260.html
நூல் தேவையானோர் முன்பதிவு செய்ய: www.eStore.ValaiTamil.com
-வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி |
||||||||
by Kumar on 13 Apr 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|