டெல்லியில் பி.சி.சி.ஐ ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஐ.பி.எல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஸ்ரீசாந்திற்கு ஆயுள் தடை விதிக்கப்பட்டது.
நடந்து முடிந்த ஆறாவது சீசன் ஐ.பி.எல் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அங்கீத்சவான், சண்டிலா ஆகியோர் மீது புகார் எழுந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமினில் வெளிவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|