|
||||||||
தமிழுக்காக உழைத்த ஆளுமை பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் |
||||||||
ஔவை து. நடராசன் (Avvai D.Natarajan; 24 ஏப்ரல் 1936 – 21 நவம்பர் 2022) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர் ஆவார். ஆங்கிலத்திலும், தமிழிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். பிறப்பு கல்வி பணிகள் தமிழ்நாட்டு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநராக 1975 முதல் 1984 வரை பணியாற்றினார்[2] பின்னர் 1984 முதல் 1992 வரை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றினார்.[4] இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இல்லாமல் தமிழ்நாட்டு அரசுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் இவர் ஒருவரே.. 16 திசம்பர் 1992 முதல் 15 திசம்பர் 1995 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பினை வகித்தார். அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார். 2015 முதல் சென்னையிலுள்ள பாரத் பல்கலைக்கழக வேந்தராகப் பணியாற்றினார். |
||||||||
by Swathi on 19 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|