|
||||||||||||||||||
பரிசும் ஊக்கமும் |
||||||||||||||||||
மணிகண்டன் தன் பெற்றோருடன் திருச்சியில் வாழ்ந்து வந்தான் .ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான் .மிகவும் சோம்பேறி, அவன் எந்த வேலையும் விருப்பமுடன் செய்ய மாட்டான். மணியை நல்ல ஒழுக்கத்தோடு வளர்க்க வேண்டும் என்று நினைத்தார்.அப்பா மணியிடம் நீ அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்,காலை கடனை முடித்து விட்டு ,சிறிது உடற்பயிற்சி செய்ய வேண்டும். என்னால் எதையும் சரியாக செய்ய முடியாது என்று நினைத்து கொண்டான் .மணி சோம்பேறி என்பதை தவிர மிகவும் நல்ல பையன் .அப்பாவிற்கும் சரி நம்ம பையன் திறமை அவ்வளவு தான் என்று சலித்து கொண்டார்.ஒரு நாள் ஊரிலிருந்து மணியின் மாமா வந்தார் .மணிக்கு மாமா என்றால் மிகவும் பிடிக்கும் .எப்பொழுது வந்தாலும் மணிக்கு பரிசு,விளையாட்டு சாமான்கள் வாங்கி வருவார்.
என்ன ஒரு ஆச்சரியம் ௨௦ வினாடிக்குள் அனைத்தையும் முடித்து விட்டு நான் தயாராக உள்ளேன் என்றான்.மாமாவுக்கு மகிழ்ச்சி.இருவரும் கடைக்கு சென்றனர்.மணிக்கு படித்த பொருளை மாமா வாங்கி தந்தார். மணியும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான்.அன்று இரவு மணியிடம் மாமா உரையாடிக் கொண்டிருந்தார்.மணி உனக்கு பிடித்த விடயம் என்ன என்று கேட்டார்.எனக்கு விளையாட்டு சாமான்கள் என்றால் மிகவும் பிடிக்கும், இனிப்பு பிடிக்கும் ,என்றான்.அதை கேட்ட மாமா சிரித்து கொண்டே அருமை என்றார்.அப்போ படிக்க பிடிக்காத?,விளையாட பிடிக்காதா?என்றார்.மணி சிரித்து கொண்டே அவ்வளவு பிடிக்காது மாமா என்றான். மாமா மணியின் முதுகை வருடி கொடுத்து கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது ,துங்குவது என்பது ஒரு மனிதனை நல்வழி படுத்தாது நல்ல மனிதனாக வாழ நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல படிப்பு தேவை .எப்பொழுதும் நம் கடமைகளை நாம் சிறக்க செய்ய வேண்டும் மணி என்றார் மாமா.உன் வயதில் நீ நன்றாக படிக்க வேண்டும்,விளையாட வேண்டும் மற்றும் நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.மணி சிறிது நேரத்திற்கு பிறகு சரிங்க மாமா என்றான்.மாமா மகிழ்ச்சியுடன் நீ உன் அப்பா பெருமை படும்படி,ஆசிரியர் பாராட்டும் படி நடக்க வேண்டும்.உன்னால் எல்லாம் முடியும் .நீ அற்புதமான குழந்தை என்றார்.இவ்வாறு பேசிக்கொண்டே வீடு திரும்பினார்கள்.மறுநாள் காலை மாமா ஊருக்கு புறப்பட்டார்.மணி..மாமா ஒரு மாதம் கழித்து உனக்கு ஒரு பரிசு வாங்கி அனுப்புகிறேன்,அதற்குள் உன் மாற்றத்தை பார்க்கவேண்டும் என்றார்.மணி மாமாவை கட்டி தழுவி சரிங்க மாமா என்றான். மணி தனக்குள் பேசிக்கொண்டான் ..மாமா சொல்லுவதை போல் நடந்தால் மாமா பரிசு வாங்கி தருவார்.நாளையிலிருந்து நான் என் கடமையை செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டான்.முதல் நாள் ,இரண்டாம் நாள் மணிக்கு தன் கடமைகளை செய்ய கடினமாக இருந்தது.அவன் முயற்ச்சியை பார்த்த அப்பவிற்க்கு மிகவும் மகிழிச்சி.மணி அப்பாவின் திட்டு இல்லாமல் பள்ளிக்குச் சென்றான்.பள்ளி படிப்பிலும் ஆர்வத்தை காட்டினான் .அதனால் நல்மதிப்பெண் பெற்றான்.ஆசிரியரும் பாராட்டினர்.மணிக்கு நம்பிக்கை பிறந்தது.இவ்வாறு நாட்கள் கடந்தன.ஒரு நாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மணிக்கு பரிசு காத்திருந்தது .ஆர்வமுடன் பரிசு பொருளை திறந்து பார்த்தான்.அவனுக்கு பிடித்த விளையாட்டு சாமானும் ,ஒரு நல்லொழுக்க சிறுகதை புத்தகமும் இருந்தது.மணிக்கு மிக்க மகிழ்ச்சி.இப்பரிசு மணியை மீண்டும் ஊக்கப்படுத்துவதை போல் இருந்தது.மணி தன் கடமையிலிருந்து தவறாமல் வெற்றி நடை போட்டான். |
||||||||||||||||||
by Swathi on 17 Feb 2019 2 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|