|
||||||||
அற்புதம் அற்புதமே... பாடல், திருபுவனம் G.ஆத்மநாதன் |
||||||||
பாடல் : அற்புதம் அற்புதமே எழுதியவர் : வள்ளலார் (திருவருட்பா) இராகம் : சிவரஞ்சனி தாளம் : ஆதி திஸ்ரம் குரல் : திருபுவனம் குரு.ஆத்மநாதன்
பாடல் வரிகள்:
அற்புதம் அற்புத மே - அருள் அற்புதம் அற்புத மே.
சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன் நித்திய ஞான நிறையமு துண்டனன் நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம் (அற்புதம்)
சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது அற்புதம் (அற்புதம்)
சாதி சமயச் சழக்கெலாம் அற்றது சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம் (அற்புதம்)
|
||||||||
by Swathi on 24 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|