பறிபோன உரிமைகளைப் பிச்சையாகப் பெற முடியாது .
தீர்மானங்கள் மூலமோ , மன்றாடுவதன் மூலமோ ,
நியாயங்கள் பிறக்காது .
இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி என அழைக்கப்படுபவர் அம்பேத்கார் ( Ambedkar ) ஆவார் . பாபா சாகேப் என அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவ் என்னும் ஊரில் பிறந்தார் . இவர் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்று முதுகலைப் பட்டத்தையும் , டாக்டர் பட்டத்தையும் பெற்றார் . அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் . பொருளாதாரம் , அரசியல் , வரலாறு , சட்டம் , தத்துவம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர் . இவர் ஆசிரியராகவும் , இதழியலாளராகவும் , எழுத்தாளராகவும் , சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கினார் . இவர் இளம்வயதிலேயே தீண்டாமைக் கொடுமையால் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார் .
இவர் சாதிய அமைப்பையும் , தீண்டாமைக் கொடுமையையும் எதிர்த்துப் போராடினார் . தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனி வாக்காளர் தொகுதியினை பெற்றுத் தந்தார் . இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சரானார் . இவர் இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கினார் . இவரின் இறப்புக்குப் பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது . இவர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று டில்லியில் இயற்கை எய்தினார் .2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைகாட்சியும் , சி . என் . என் . ஐ . பி . என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச் சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .
|