ஜோதிடர் பலராமனின் கணிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான சுறுசுறுப்பாகவும் திறமையாகவும் சுக்மா மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றி வந்த I. A. S. அதிகாரியான அலெக்ஸ் பால் மேனனை சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு அரசு விழாவின்போது மாவோயிஸ்ட்கள் கிராமவாசிகள் போல் வேடமிட்டு நாடகமாடி கடத்திச் சென்று விட்டார்கள். திரு பால் மேனனின் ஜாதகம் நம்மிடம் இல்லை. ஆனால் அவர் கடத்தப்பட்ட நாளின் கிரக நிலைகளைகளை வைத்துப் பார்க்கும்போது சில சூட்சுமமான ஜோதிட விதிகளின்படி ஏப்ரல் 30 -ஆம் தேதி மாலை 06.00 மணிக்குப்பிறகு மே மாதம் 2 -ஆம் தேதி இரவு 08.00 மணிக்குள் அவர் விடுவிக்கப்படுவார். இது தவறும் பட்சத்தில் மே மாதம் 10 -ஆம் தேதி நள்ளிரவுக்குள் நிச்சயம் விடுவிக்கப்படுவார். ஆஸ்துமா நோயினால் ஏற்படும் உடல்நலக்குறைவைத் தவிர மாவோயிஸ்டுகளால் அவருக்கு வேறு எந்தப் பிரச்சினையும் பாதிப்பும் இருக்காது. ஒரு திறமையான அதிகாரி என்பதற்காகவும் ஆதிவாசிகளின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார் என்பதற்காகவும் அவர் நலமுடன் வீடு திரும்ப தமிழர் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
ஜோதிடத்தில் துல்லியமாக பலன் சொல்ல முடியும் என்பதற்கு இதை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.
|