|
||||||||
ஆற்று தண்ணீரே எங்கே ஓடுகிறாய் ? |
||||||||
ஆற்றில் ஓடும் தண்ணீரே !யாரை தேடி ஒடுகிறாய் ? என் அன்னையை தேடி ஓடுகிறேன். ஓடும் போது நீ, சுழன்று சுழன்று செல்வது ஏன்? என்னை தடுக்கும் இடத்தில் சுழன்று சுழன்று செல்வேன். உன் அன்னை என்பவள் யார்?அவள் எங்கே இருக்கிறாள்? பரந்து விரிந்து கிடக்கும் கடல்தான் என் அன்னை. இங்கு வந்து பிறந்து, ஏன் அன்னையை தேடி ஓடுகிறாய்? மீண்டும் மீண்டும் பிறக்க, அன்னையை தேடி ஓடுகிறேன். மீண்டும்,மீண்டும், எப்படி பிறப்பாய்? சூரிய கதிரின் வேகத்தால் அன்னையிடம் ஆவியாகி, வானில் மிதக்கும் மேகத்துடன் சேருவேன். அங்கிருந்து மீண்டும், தரையை நோக்கி வருவேன். வந்து சேர்ந்து கூடி, அன்னையை பார்க்க நகர்வேன். போகும் பாதை முழுவதும் குடிக்க தண்ணீர் தருவேன் காடு வயல் யாவையும் பசுமையாக்கி தருவேன். கிணறு குளம் யாவையும் நீரை நிரப்பி தருவேன் என்னை தடுத்து சேர்த்து வைத்தால் மின்சாரம் கூட தருவேன் உலக உயிர்கள் அனைத்துக்கும் நானே உயிராய் இருந்திடுவேன். |
||||||||
Where are you going river? | ||||||||
by Dhamotharan.S on 11 Aug 2016 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|