|
||||||||
கண்டேன் சீதையை -அருணாச்சல கவிராயர் |
||||||||
கண்டேன் சீதையை
ராகம் - பாகேஸ்ரீ இயற்றியவர் - அருணாச்சல கவிராயர்
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை கண்டேன் ராகவா நான் (கண்டேன்)
அண்டரும் காணாத இலங்காபுரியில் அரவிந்த வேதாவை தரவந்த மாதாவை (கண்டேன்)
பனிகால வாரிஜம் போல நிறம் பூசி பகலோடு யுகமாக கழித்தாலே பிரயாசி நினைதங்கி ராவணன் அந்நாள் வர ச்சிச்சி நில்லடா என்றே ஏசி தனித்துதன் உயிர் தன்னை தான்விட மகராசி சாரும் போதே நானும் சமயமிதே வாசி இனி தாமதம் செயல் ஆகாதேன்றிடர் வீசி ராம ராம ராம என்றெதிர் பேசி ||
|
||||||||
by Swathi on 22 Jul 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|