|
|||||
1991ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் |
|||||
1991 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில்
இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அரசியல் நிலவரம்:ஜெயலலிதா அதிமுகவின் தலைவரானார். பின் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்,
அதிமுக-காங்கிரசு கூட்டணி தமிழகத்தில் பெருவாரியான இடங்களை வென்றது. மத்தியில் ஜனதா தளத்தின் வி. பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி
ஆட்சி அமைந்தது. விரைவில் வி. பி. சிங் அரசு கவிழ்ந்து, காங்கிரசின் ஆதரவுடன் சமாஜ்வாடி ஜனதா கட்சி தலைவர் சந்திரசேகர் பிரதமரானார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறைந்தது விட்டது என்ற காரணம் காட்டி அதிமுக மற்றும் காங்கிரசு கட்சியினர், திமுக அரசைக் கலைக்க வேண்டுமென
மத்திய அரசை வற்புறுத்தினர். ஜூன் 1990 இல் சென்னையில் ஈ. பி. ஆர். எல். ஃப் தலைவர் பத்மநாபா, எல். டி. டி. ஈ அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்ட
சம்பவத்தை மேற்கோள் காட்டி மத்திய சட்ட அமைச்சர் சுப்ரமணியம் சாமியும், தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைத்தார். ஜனவரி 1991
இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, ஜூன் 1991 இல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.கூட்டணிகள்:இத்தேர்தலில் அதிமுக-இந்திரா காங்கிரசு, ஒரு அணியாகவும்,
திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா தளம், தாயக மறுமலர்ச்சிக் கழகம் மற்றொரு கூட்டணியாகவும்
போட்டியிட்டன. பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட இந்தியன் காங்கிரசு கட்சி வேட்பாளர் சஞ்சய்
ராமசாமி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தார்.தேர்தல் முடிவுகள்:தேர்தல் தேதி 24 ஜூன் 1991; மொத்தம் 63.92 % வாக்குகள் பதிவாகின.அதிமுக
தனிப்பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
1991 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரசியல் நிலவரம்:
ஜெயலலிதா அதிமுகவின் தலைவரானார். பின் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக காங்கிரசு கூட்டணி தமிழகத்தில் பெருவாரியான இடங்களை வென்றது. மத்தியில் ஜனதா தளத்தின் வி. பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சி அமைந்தது. விரைவில் வி. பி. சிங் அரசு கவிழ்ந்து, காங்கிரசின் ஆதரவுடன் சமாஜ்வாடி ஜனதா கட்சி தலைவர் சந்திரசேகர் பிரதமரானார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறைந்தது விட்டது என்ற காரணம் காட்டி அதிமுக மற்றும் காங்கிரசு கட்சியினர், திமுக அரசைக் கலைக்க வேண்டுமென மத்திய அரசை வற்புறுத்தினர். ஜூன் 1990 இல் சென்னையில் ஈ. பி. ஆர். எல். ஃப் தலைவர் பத்மநாபா, எல். டி. டி. ஈ அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி மத்திய சட்ட அமைச்சர் சுப்ரமணியம் சாமியும், தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைத்தார். ஜனவரி 1991 இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, ஜூன் 1991 இல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கூட்டணிகள்:
இத்தேர்தலில் அதிமுக இந்திரா காங்கிரசு, ஒரு அணியாகவும், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா தளம், தாயக மறுமலர்ச்சிக் கழகம் மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட இந்தியன் காங்கிரசு கட்சி வேட்பாளர் சஞ்சய் ராமசாமி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தார்.
தேர்தல் முடிவுகள்:
தேர்தல் தேதி 24 ஜூன் 1991; மொத்தம் 63.92 % வாக்குகள் பதிவாகின.அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். |
|||||
by Swathi on 25 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|