|
|||||
1970 முதல் 1976 வரை அரசியல் |
|||||
கட்சிகள்:1967 ஆம் ஆண்டு முதல்முறையாக திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாத்துரை 1969 இல்
இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். முந்தைய தேர்தல் வரை திமுகவை
எதிர்த்து வந்த பெரியார் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகம் இத்தேர்தலில் திமுகவை ஆதரித்தது. இந்திய தேசிய காங்கிரசு 1969 ஆம் ஆண்டு பிளவு
பட்டது. மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை கட்சியை விட்டு வெளியேற்ற
முயன்றதால் இப்பிளவு ஏற்பட்டது. இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்திரா காங்கிரசு அல்லது ரிகவசிஷன் காங்கிரசு எனவும், தேசாய், காமராஜர்
பிரிவினர் நிறுவன காங்கிரசு எனவும் அறியப்பட்டனர். தமிழகத்தில் காமராஜரின் ஆதிக்கத்தில் காங்கிரசு கட்சி இருந்து வந்ததால், நிறுவன காங்கிரசின்
கை ஓங்கி காணப்பட்டது. சி. சுப்ரமணியத்தின் தலைமையில் செயல்பட்ட தமிழக இந்திரா காங்கிரசு பலவீனமாகவே இருந்தது. 1967 இல் திமுக
கூட்டணியில் இருந்த ராஜகோபாலாச்சாரியின் சுதந்திராக் கட்சி, மதுவிலக்கை திமுக அரசு தளர்த்தியதால், திமுக வுடனான உறவை முறித்துக் கொண்டது.
அரசியல் நிலவரம்:திமுகவின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே கருணாநிதியின் திமுக அரசு பதவி விலகி தேர்தலை சந்தித்தது. திமுகவின்
கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, முஸ்லீம் லீக், ஃபார்வார்டு ப்ளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சொஷ்யலிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன.
திமுகவுக்கு ஆதரவளித்த இந்திரா காங்கிரசு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக நாடாளுமன்றத் தேர்தலில் 9 இடங்களில் மட்டுமே
போட்டியிட்டது. திமுகவிற்கு எதிராக நிறுவன காங்கிரசு, சுதந்திரா கட்சி, சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசு கழகம்,
குடியரசு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப்
போட்டியிட்டது.ஆட்சி அமைப்பு:இத்தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று, மு. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். சி. பி. சிற்றரசு:திமுகவின்
செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில்
துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன்
தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார். 1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில்
இணைந்தார். 1978 இல் நொய்வாய்பட்டு மரணமடைந்தார்.
கட்சிகள்:
1967 ஆம் ஆண்டு முதல்முறையாக திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாத்துரை 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். முந்தைய தேர்தல் வரை திமுகவை எதிர்த்து வந்த பெரியார் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகம் இத்தேர்தலில் திமுகவை ஆதரித்தது. இந்திய தேசிய காங்கிரசு 1969 ஆம் ஆண்டு பிளவுபட்டது. மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை கட்சியை விட்டு வெளியேற்ற முயன்றதால் இப்பிளவு ஏற்பட்டது.
இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்திரா காங்கிரசு அல்லது ரிகவசிஷன் காங்கிரசு எனவும், தேசாய், காமராஜர் பிரிவினர் நிறுவன காங்கிரசு எனவும் அறியப்பட்டனர். தமிழகத்தில் காமராஜரின் ஆதிக்கத்தில் காங்கிரசு கட்சி இருந்து வந்ததால், நிறுவன காங்கிரசின் கை ஓங்கி காணப்பட்டது. சி. சுப்ரமணியத்தின் தலைமையில் செயல்பட்ட தமிழக இந்திரா காங்கிரசு பலவீனமாகவே இருந்தது. 1967 இல் திமுக கூட்டணியில் இருந்த ராஜகோபாலாச்சாரியின் சுதந்திராக் கட்சி, மதுவிலக்கை திமுக அரசு தளர்த்தியதால், திமுக வுடனான உறவை முறித்துக் கொண்டது.
அரசியல் நிலவரம்:
திமுகவின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே கருணாநிதியின் திமுக அரசு பதவி விலகி தேர்தலை சந்தித்தது. திமுகவின் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, முஸ்லீம் லீக், ஃபார்வார்டு ப்ளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சொஷ்யலிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. திமுகவுக்கு ஆதரவளித்த இந்திரா காங்கிரசு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக நாடாளுமன்றத் தேர்தலில் 9 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது.திமுகவிற்கு எதிராக நிறுவன காங்கிரசு, சுதந்திரா கட்சி, சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசு கழகம், குடியரசு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது.
ஆட்சி அமைப்பு:
இத்தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று, மு. கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.
சி. பி. சிற்றரசு:
திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார். 1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1978 இல் நொய்வாய்பட்டு மரணமடைந்தார். |
|||||
by Swathi on 24 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|