|
|||||
1930 முதல் 1937 வரை தேர்தல் |
|||||
அரசியல் நிலவரம்: எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், சுப்பராயன் தலைமையில் சுயேட்சைகளின் ஆட்சி அமைந்திருந்தது. சுயாட்சிக்
கட்சியும், நீதிக் கட்சியும் சுப்பராயனின் ஆட்சிக்கு எதிரணியில் இருந்தன. ஆனால் இரு ஆண்டுகளுக்குள், நீதிக் கட்சி சுப்பராயனுக்கு ஆதரவான நிலை
எடுத்தது.1930 களில் உலகைப் பீடித்த பெரும் பொருளியல் வீழ்ச்சியினால் கடும் பாதிப்புக்குள்ளான சென்னை மாகாண மக்கள் நீதிக்கட்சி அரசின் மேல் கடும்
அதிருப்தியில் இருந்தனர். மேலும் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்ததால், மக்களிடையே தேசிய உணர்வு மிகுந்திருந்தது. நீதிக் கட்சியின் பிரிட்டிஷ்
ஆதரவுப் போக்கு மக்களின் அதிருப்தியை அதிகப் படுத்தியது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடி வந்த இந்திய தேசியக் காங்கிரசு, மக்களிடையே பெரும்
ஆதரவைப் பெற்றிருந்தது. காங்கிரசின் சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு இயக்கம், நிலவரி குறைப்புப் போராட்டம், நெசவாளர்கள் கூலி உயர்வு போராட்டம்
ஆகியவை மக்களின் ஆதரவை பெற்றிருந்தன செப்டம்பர் 1930 இல் நடைபெற்ற இத்தேர்தலில் 43 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 45 இடங்களில்
போட்டியிட்ட நீதிக்கட்சி 35 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. முதல்வர் சுப்பராயனின் தேசீயவாத சுயேட்சைகளும், அவர்களுக்கு
ஆதரவளித்த லிபரல் கட்சியினரும் பத்துக்கும் குறைவான இடங்களில் வென்றனர். 35 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நீதிக்கட்சித் தலைவரும் முதல்வருமான பொபிலி அரசரும் அவரது அமைச்சர்களும், தங்களது அலட்சிய சர்வாதிகாரப் போக்கால், மக்களிடம் வெறுப்பை
சம்பாத்திருந்தனர். அவர்கள் மீது பொதுமக்களுக்கிருந்த கோபத்தைப் பற்றி செய்தி வெளியிட்ட “ஜமீன் ரயாட்” இதழ், “கிராமங்களில் கிழவிகள் கூட
பொபிலி அரசு எப்பொழுது ஒழியும்” என்று ஏங்குவதாகக் கூறியது. பெரியாரின் சுய மரியாதை இயக்கம், நீதிக்கட்சியை ஆதரிக்கும் வெகுஜன இயக்கங்கள்
மிகச் சிலவற்றுள் ஒன்றாக இருந்தது. 1930-34 இல் பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் 1934 இல் சரியானது. கம்யூனிஸ்டுகளுடன்
நெருக்கம் காட்டி வந்த பெரியார், கம்யூனிஸ்ட் கட்சி 1934 இல் தடை செய்யப்பட்டதாலும், அரசு தந்த நெருக்கடிகளாலும், வெளிப்படையான பொதுவுடமைக்
கொள்கையை கைவிட்டு நீதிக்கட்சியுடன் மீண்டும் நெருக்கமானார். அவரது ஆதரவைப் பெறுவதற்காக நீதிக்கட்சி பொதுவுடமை அம்சங்கள் நிறைந்த
அவரது “ஈரோடு திட்ட” த்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டது.முதல்வர்:சென்னை மாகாணத்தில் மாநில சுயாட்சி முறை அமல்படுத்தப்பட்ட பின்
சட்டமன்றத்திற்கான முதல் தேர்தல் 1937ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. இந்திய தேசிய காங்கிரசு வெற்றி பெற்று ராஜகோபாலாச்சாரி சென்னை
மாகாணத்தின் முதல்வரானார்.
அரசியல் நிலவரம்:
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், சுப்பராயன் தலைமையில் சுயேட்சைகளின் ஆட்சி அமைந்திருந்தது. சுயாட்சிக் கட்சியும், நீதிக் கட்சியும் சுப்பராயனின் ஆட்சிக்கு எதிரணியில் இருந்தன. ஆனால் இரு ஆண்டுகளுக்குள், நீதிக் கட்சி சுப்பராயனுக்கு ஆதரவான நிலை எடுத்தது.1930 களில் உலகைப் பீடித்த பெரும் பொருளியல் வீழ்ச்சியினால் கடும் பாதிப்புக்குள்ளான சென்னை மாகாண மக்கள் நீதிக்கட்சி அரசின் மேல் கடும்
காங்கிரசின் சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு இயக்கம், நிலவரி குறைப்புப் போராட்டம், நெசவாளர்கள் கூலி உயர்வு போராட்டம் ஆகியவை மக்களின் ஆதரவை பெற்றிருந்தன செப்டம்பர் 1930 இல் நடைபெற்ற இத்தேர்தலில் 43 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 45 இடங்களில் போட்டியிட்ட நீதிக்கட்சி 35 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. முதல்வர் சுப்பராயனின் தேசீயவாத சுயேட்சைகளும், அவர்களுக்கு ஆதரவளித்த லிபரல் கட்சியினரும் பத்துக்கும் குறைவான இடங்களில் வென்றனர். 35 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். நீதிக்கட்சித் தலைவரும் முதல்வருமான பொபிலி அரசரும் அவரது அமைச்சர்களும், தங்களது அலட்சிய சர்வாதிகாரப் போக்கால், மக்களிடம் வெறுப்பை சம்பாத்திருந்தனர்.
அவர்கள் மீது பொதுமக்களுக்கிருந்த கோபத்தைப் பற்றி செய்தி வெளியிட்ட “ஜமீன் ரயாட்” இதழ், “கிராமங்களில் கிழவிகள் கூட பொபிலி அரசு எப்பொழுது ஒழியும்” என்று ஏங்குவதாகக் கூறியது. பெரியாரின் சுய மரியாதை இயக்கம், நீதிக்கட்சியை ஆதரிக்கும் வெகுஜன இயக்கங்கள் மிகச் சிலவற்றுள் ஒன்றாக இருந்தது. 1930-34 இல் பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் 1934 இல் சரியானது. கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கம் காட்டி வந்த பெரியார், கம்யூனிஸ்ட் கட்சி 1934 இல் தடை செய்யப்பட்டதாலும், அரசு தந்த நெருக்கடிகளாலும், வெளிப்படையான பொதுவுடமைக் கொள்கையை கைவிட்டு நீதிக்கட்சியுடன் மீண்டும் நெருக்கமானார். அவரது ஆதரவைப் பெறுவதற்காக நீதிக்கட்சி பொதுவுடமை அம்சங்கள் நிறைந்த அவரது “ஈரோடு திட்ட” த்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டது.
முதல்வர்:
சென்னை மாகாணத்தில் மாநில சுயாட்சி முறை அமல்படுத்தப்பட்ட பின் சட்டமன்றத்திற்கான முதல் தேர்தல் 1937ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. இந்திய தேசிய காங்கிரசு வெற்றி பெற்று ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாணத்தின் முதல்வரானார். |
|||||
by Swathi on 24 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|