|
|||||
1923 முதல் 1926 வரை தேர்தல் |
|||||
வரலாறு:சட்டமன்றத்திற்கான இரண்டாம் தேர்தல் 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடை பெற்றது. நீதிக்கட்சி வெற்றி பெற்று பனகல் அரசர் இரண்டாம்
முறையாக சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார்.1923 இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணம், தற்கால தமிழ் நாடு, தெலுங்கானா தவிர்த்த
ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது.தேர்தல் முடிவுகள்:31
அக்டோபர் 1923 இல் வாக்குப்பதிவு தொடங்கியது. மாகாணத்தின் சில பகுதிகளில் கடும் மழை காரணமாக நவம்பர் 10 ஆம் தேதி வரை வாக்குப்பதிவு
நடைபெற்றது. 44 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 17 தொகுதிகளிலிருந்து 20 உறுப்பினர்கள் போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஆட்சி அமைப்பு:நீதிக்கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிந்தாலும், அதற்கு தனிப் பெரும்பான்மை கிட்டவில்லை. ஆளுனர்
வில்லிங்டன் பிரபு, பனகல் அரசரை ஆட்சியமைக்க அழைத்தார். சட்டமன்றம் கூடிய முதல் நாள் அன்றே சி. ஆர் ரெட்டி தலைமையில் எதிர் கட்சிகள்
நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன. நியமிக்கப் பட்ட உறுப்பினர்களின் துணையுடன் அரசு அத்தீர்மானத்தை 65-43 என்ற கணக்கில்
தோற்கடித்தது. இந்திய வரலாற்றில், சட்டமன்றங்களில் கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இதுவே.எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை:
1924ல் சென்னை மாகாண சட்டமன்றத்தின் அவைத்தலைவராக இருந்த பெருங்காவலூர் ராஜகோபாலச்சாரி பதவி விலகியதால், அவைத்தலைவர் பதவிக்கு
தேர்தல் நடத்தப்பட்டது. அதில் நீதிக்கட்சி சார்பாகப் போட்டியிட்ட சாமிக்கண்ணு வெற்றிபெற்று அவைத்தலைவரானார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல் அவைத்தலைவர் அவரே. அவைத்தலைவராக இருந்த போது சட்டமன்ற நூலகத்தை உருவாக்கினார். பதவியில் இருக்கும் போதே மரணமடைந்தார்.
திவான் பகதூர் பட்டம் பெற்ற இவர், 1924ல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு அமைப்புப் பட்டியலில் இடம் பெற்றார்.தாக்கம்:நீதிக்கட்சி அரசு முந்தைய
மூன்றாண்டுகளில் பின்பற்றிய கொள்கைகளையே மீண்டும் பின்பற்றியது. 1922 இல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்து அறநிலையச் சட்டம்,
இவ்வரசினால் 1925 இல் நிறைவேற்றப்பட்டது. மாகாணத்திலிருந்த பல இந்து வழிபாட்டுத் தலங்களை அரசு நிர்வகிக்கத் தொடங்கியது. தற்காலத்தில்
தமிழ் நாடு அரசின் அறநிலையத் துறை தோன்ற இச்சட்டமே முன்னோடியாகும்.
வரலாறு:
சட்டமன்றத்திற்கான இரண்டாம் தேர்தல் 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடை பெற்றது. நீதிக்கட்சி வெற்றி பெற்று பனகல் அரசர் இரண்டாம் முறையாக சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார்.1923 இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணம், தற்கால தமிழ் நாடு, தெலுங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது.
தேர்தல் முடிவுகள்:
31 அக்டோபர் 1923 இல் வாக்குப்பதிவு தொடங்கியது. மாகாணத்தின் சில பகுதிகளில் கடும் மழை காரணமாக நவம்பர் 10 ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 44 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 17 தொகுதிகளிலிருந்து 20 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆட்சி அமைப்பு:
நீதிக்கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிந்தாலும், அதற்கு தனிப் பெரும்பான்மை கிட்டவில்லை. ஆளுனர் வில்லிங்டன் பிரபு, பனகல் அரசரை ஆட்சியமைக்க அழைத்தார். சட்டமன்றம் கூடிய முதல் நாள் அன்றே சி. ஆர் ரெட்டி தலைமையில் எதிர் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன. நியமிக்கப் பட்ட உறுப்பினர்களின் துணையுடன் அரசு அத்தீர்மானத்தை 65-43 என்ற கணக்கில் தோற்கடித்தது. இந்திய வரலாற்றில், சட்டமன்றங்களில் கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இதுவே.
எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை:
1924ல் சென்னை மாகாண சட்டமன்றத்தின் அவைத்தலைவராக இருந்த பெருங்காவலூர் ராஜகோபாலச்சாரி பதவி விலகியதால், அவைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் நீதிக்கட்சி சார்பாகப் போட்டியிட்ட சாமிக்கண்ணு வெற்றிபெற்று அவைத்தலைவரானார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அவைத்தலைவர் அவரே. அவைத் தலைவராக இருந்த போது சட்டமன்ற நூலகத்தை உருவாக்கினார். பதவியில் இருக்கும் போதே மரணமடைந்தார். திவான் பகதூர் பட்டம் பெற்ற இவர், 1924ல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு அமைப்புப் பட்டியலில் இடம் பெற்றார்.
தாக்கம்:
நீதிக்கட்சி அரசு முந்தைய மூன்றாண்டுகளில் பின்பற்றிய கொள்கைகளையே மீண்டும் பின்பற்றியது. 1922 இல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்து அறநிலையச் சட்டம், இவ்வரசினால் 1925 இல் நிறைவேற்றப்பட்டது. மாகாணத்திலிருந்த பல இந்து வழிபாட்டுத் தலங்களை அரசு நிர்வகிக்கத் தொடங்கியது. தற்காலத்தில் தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறை தோன்ற இச்சட்டமே முன்னோடியாகும். |
|||||
by Swathi on 24 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|